கழுதைக்கும், நாய்க்கும் திருமணம் .. இது மதுரையில்
திருப்பரங்குன்றம் (மதுரை):
மதுரையில் கல் மழையை நிறுத்த ரஜினி ரசிகர்கள் கழுதைக்கும் நாய்க்கும் திருமணம்நடத்தி வைத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயிருக்கும் படப்படி தெருவில் சென்ற சிலமாதங்களாக இரவு 7 மணிக்கு மேல் குறிப்பிட்ட சில வீடுகளில் மட்டும் சிறுகற்கள்மழையாக பெய்து வந்தது. இதனால் அந்த வீட்டின் ஒடுகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ்கூரைகள் உடைந்துவிட்டன.
இதன் காரணமாக எப்போது கற்கள் விழுமோ என்ற பயம் காரணமாக அந்த பகுதிமக்கள் தூக்கமிழந்து தவித்து வந்தார்கள். இந்த கல் மழைக்கு பரிகாரம் கேட்டுசாமியாரிடம் சென்று பரிகாரம் கேட்டனர்.
அந்த சாமியார் சாமி குற்றம்தான் கல் மழைக்கு காரணம். மலை மீதுள்ள முனியாண்டிகோயிலில் சிறப்பு வழிபாடு செய்தால் கல் மழை பெய்யாது என கூறியதையடுத்துமுனியாண்டிக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன் பின்பும் கல்மழை நிற்கவில்லை.
இந்நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள சாமியார் சொன்ன பரிகாரம் என கூறி ரஜினிரசிகர்கள் திங்கள்கிழமை கழுதைக்கும் நாய்க்கும் திருமணம் செய்து வைத்தனர்.இதற்கென அழைப்பிதழும் அச்சடித்து கொடுக்கப்பட்டது.
கழதைக்கும், நாய்க்கும் நெற்றியில் சந்தனமும், குங்குமமும், வைக்கப்பட்டு கழுத்தில்மாலை சகிதமாக சித்தர் மடத்திற்கு இழுத்து வரப்பட்டன. அங்கு கழுதைக்கும்,நாய்க்கும் மூன்று முறை மாலை மாற்றி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications