தேர்தல் குறித்து ம.தி.மு.க. ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ம.தி.மு.கஆலோசனை நடத்தியது.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. வரவிருக்கும் சட்டசபை தேர்தலில்எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது.
இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கட்சி தலைவர் கணேசன், மத்திய அமைச்சர்கள்கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சட்டசபைத் தேர்தலில் எத்தனை இடங்களில் ம.தி.மு.க. போட்டியிட வேண்டும் என இப்போது முடிவு செய்யக்கூடாது. ஏனென்றால் தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது என கட்சி பிரமுகர்கள் சிலர் தெரிவித்தனர்.
கட்சிக்கு நிதி வசூல் செய்வது பற்றியும் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள்தெரிவித்தன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications