கண்ணன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு
புதுவை:
புதுவையில் கட்சித் தாவல் சட்டப்படி கண்ணன் அணியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டது.
புதுவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக கண்ணன் இருந்தார். அவர் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்து வந்தார். சமீபத்தில் அவர்த.மா.கா.பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களான ஏழுமலை, ராஜசேகர உடையார், மனோகர் ஆகியோரும்தமிழ் மாநில காங்கிரசிலிருந்து விலகினர்.
த.மா.கா. கட்சியிலிருந்து விலகிய இவர்கள் 3 பேரும் தங்களை மனோகர் குழு என்று அறிவித்துள்ளனர். இந்த நிலையில் சட்டசபையின் நடவடிக்கைகளைமீறியதாக அமைச்சர் கண்ணனை, முதல்வர் சண்முகம் டிஸ்மிஸ் செய்தார்.
த.மா.கா.வினர் மனு:
இந்நிலையில் கட்சித் தாவல் சட்டப்படி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் சபாநாயகர் சுப்ரமணியத்திடம் மனு கொடுத்தனர்.
அவர் உடனடியாக இந்த மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அவர்கள்திங்கள்கிழமை விளக்கம் அளித்தனர். ஆனால் அவர்கள் அளித்த விளக்கம் சரியாக இல்லை என்று காரணம் காட்டி சபாநாயகர் சுப்ரமணியம் அவர்கள் 3பேரின் எம்.எல்.ஏ.பதவி பறிக்கப்படுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து சபாநாயகர் சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தலில் நிற்க சீட் கொடுத்த கட்சியை நெருக்கடிக்கு உள்ளாக்கி விட்டு, கட்சியிலிருந்தஇந்த 3 எம்.எல்.ஏ.க்களும் விலகி விட்டனர். அவர்கள் வேறு கட்சியில் சேர்ந்தாலும், தனி குழுவாகப் பிரிந்தாலும் அது கட்சித் தாவல் தடைசட்டத்துக்கு உட்பட்டதாகும். இதனால் எம்.எல்.ஏ.க்கள் மனோகர், ராஜசேகர உடையார், ஏழுமலை ஆகியோர் பதவி நீக்கம்செய்யப்படுகிறார்கள்.
இதுகுறித்து கவர்னர் ரஜனி ராய், முதல்வர் சண்முகம், தலைமைச் செயலாளர் ஜோசப் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கண்ணன் மீது இது வரைபுகார் எதுவும் வரவில்லை. அதனால் அவரது பதவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் புதுவை சபாநாயகர் சுப்ரமணியம்.