த.மா.கா. தலைவராக மீண்டும் மூப்பனார்
சென்னை:
சென்னையில் புதன்கிழமை கூடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூப்பனார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், கட்சியின் தேர்தல் அதிகாரியுமான ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் புதன்கிழமை காலை 10 மணிக்குநடக்கும். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டிக் கொள்கிறேன்.
இப்பொதுக்குழுக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் தேர்தல் நடைபெறும். பொதுக்குழுவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்தும், கூட்டணிபற்றியும் விரிவாக விவாதிக்கப்படும்.
கூட்ட முடிவில் கட்சியின் தலைவர் தேர்தல் நடக்கிறது. இதில் மூப்பனார் மீண்டும் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications