தடையை மீறி கொடியேற்றினார் ராமதாஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி உழவர்கரை தொகுதியில் இரண்டு இடங்களில் போலீஸ் தடையை மீறி டாக்டர் ராமதாஸ் கொடி ஏற்றினார். இதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் புதுவை உழவர்கரை தொகுதியில் சுற்றுப் பயணம் செய்து முப்பது இடங்களில் கொடியேற்றத்திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் செவ்வாய்க்கிழமை காலை பாண்டிச்சேரி வந்தார்.
காலை 10.30 மணியளவில் அவர் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கி பல இடங்களில் கொடி ஏற்றி வைத்தார். உழவர்கரை தொகுதியில் உள்ளஅரும்பார்த்தபுரம் பேட், முத்துப்பிள்ளை பாளையம் ஆகிய இடங்களில் கொடி ஏற்ற போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. அங்கு சென்றால் பதட்டம்ஏற்படும் என்று அவர்கள் கூறினார்கள்.
ஆனால் போலீஸார் விதித்த தடையை மீறி டாக்டர் ராமதாஸ் அந்த பகுதிகளுக்கு சென்று கொடி ஏற்றினார். ஏராளமான போலீஸாரும் அவருடன்சென்றனர். இதனால் அந்த கிராமங்களில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் எந்தவித அசம்பாவிதம் நடைபெறவில்லை. போலீஸ் தடையை மீறி சென்றது ஏன் என்பது குறித்து கட்சியின் முக்கிய பிரகரான முன்னாள்நீதிபதி கோவிந்தராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
அரும்பார்த்த புரம், முத்துப்பிள்ளை பாளையத்தில் எங்களுக்கு நல்ல ஆதரவு உள்ளது. அதனால் தான் அங்கு சென்றோம். எந்தப் பிரச்சனையும்எழவில்லை. டாக்டர் ராமதாஸூக்கு அங்குள்ள பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் என்றார் அவர்.
முன்னதாக, போலீஸ் தடையை மீறி ராமதாஸ் கொடியேற்றியது பாண்டிச்சேரி பகுதிகளில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications