நதிகளைத் தூய்மைப்படுத்த ரூ 38 கோடி ஒதுக்கீடு
கோவை:
அகில இந்திய அளவில் நதிகளைத் தூய்மைப் படுத்தும் திட்டத்திற்கு 38 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு செவ்வாய்க்கிழமை கூறினார்.
கோவையில் மத்திய வனத் துறை மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் டி. ஆர் பாலு நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
நதி நீரைத் தூய்மைப் படுத்த 9 வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ. 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இந்த நிதி தற்போது செலவிடப்பட்டு வருகிறது. 16 மாநிலங்களில், 122 நதிகளைத்தூய்மைப்படுத்தப்படும். இதற்காக 128 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கழிவு நீர் சுத்தகரிப்பிற்கு 208 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதாளச் சாக்கடை திட்டத்தின் கீழ்கோவை மாநகராட்சியின் சில மண்டலங்களைத் தூய்மைப் படுத்த திட்டமிட்டுள்ளோம்.
நதிநீர் தூய்மைப் படுத்தும் திட்டத்தின் கீழ் சென்னையில் கூவம் நதியும், பக்கிங்காம் கால்வாயும் தூய்மைப்படுத்ததிட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான துவக்க விழா விரைவில் நடக்கவுள்ளது. இதில் முதல்வர் கருணாநிதிகலந்து கொள்கிறார்.
கோவையில் நொய்யல் நதியைத் தூய்மைப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளிடம் திட்டம் கேட்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின்படி மாசடைந்துள்ள நொய்யல் நதியை தூய்மைப்படுத்த முடியும்.
காவிரி, கோதாவரி, கிருஷ்ணா, கங்கை ஆகிய நதிகளில் தூய்மைப்படுத்தப்படும் பணி துவங்கியுள்ளது. இதேபோன்று சிறு சிறு நதிகளையும் தூய்மைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி, சீரங்கம், மயிலாடுதுறை,திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் உள்ள சிறு நதிகளையும் பார்வையிட்ட பின்னர் தூய்மைப்படுத்துவது குறித்துமுடிவு செய்யப்படும்.
ஊட்டி, கொடைக்கானல் ஏரிகளும் தூய்மைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு மேற்கொண்டு வரும்பசுமை வளையத் திட்டம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.
ஆந்திராவில் மிருகக்காட்சி சாலையில் விலங்குகளின் தோலை நான் உரிக்கச் சொல்லவில்லை. சொன்னவர்களின்தோலைத்தான் உரிக்க வேண்டும் என்றார் டி.ஆர் பாலு.