பெரும்பான்மை இருக்கிறது...புதுவை முதல்வர்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் முன்று எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் தான் பெரும்பான்மையை இழக்கவில்லை என பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம்செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எனது அரசு இன்னும் பெரும்பான்மை பலத்துடன்தான் இருக்கிறது. எனக்கு பெரும்பான்மை இல்லை என கூறும் எதிர் கட்சியினர் ஆளுநரிடம்சட்டசபையைக் கூட்டுமாறு கேட்டு அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்கட்டும்.
எனக்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்த பின் ஒரு கணம் கூட நான் பதவியில் இருக்க மாட்டேன். டிசம்பர் மாதம் 7-ம் தேதி அவையில்தாக்கப்பட்ட பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதே எனக்கு பெரும்பான்மை பலம் இருகிறது என்பதை நிரூபிக்கிறது.
நான் ஒரு தூய்மையான அரசியல்வாதி. பதவியில் நீடிக்க எம்.எல்.ஏ.க்களை விலை பேச மாட்டேன்.
ஒன்றுபட்ட ஜனதாதள உறுப்பினர் ராஜாராம் எனது அரசிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளிக்கவில்லை. ஆனால் அவர் த.மா.கா. தலைவர் மூப்பனாரைசந்தித்து அவருடன் சிறிது நேரம் பேசினார். அவர் டிசம்பர் மாதம் 7-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அரசைஆதரிப்பதா இல்லையா என்பது அவரது சொந்த விருப்பம்.
மனோகர் அணியின் மூன்று எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம செய்தது சபாநாயகரின் முடிவு. அவர் அரசியல் சட்டத்தின் படிதான் நடவடிக்கை எடுத்துள்ளார்.சபாநாயகரின் உரிமைகளில் நான் தலையிட விரும்பவில்லை என அவர் கூறினார்.
யு.என்.ஐ.