பிறந்தநாளுக்கு வந்தவர்கள் விபத்தில் சாவு
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
பிறந்த நாள் கொண்டாட திருப்பூரிலிருந்து கோவைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கார் மோதிஇறந்தனர்.
திருப்பூர் குமார் நகரைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மகன் குழந்தை ராஜ் (26). இவர் தச்சு வேலை பார்த்துவந்தார்.
இவரது நண்பர் சுரேஷ் (25). குழந்தை ராஜின் பிறந்த நாளையொட்டி, பைக்கில் இருவரும் கோவை வந்துகொண்டிருந்தனர். அப்போது எதிரே சென்ற ஒரு கார், இவர்கள் மீது மோதியது.
இதில், குழந்தை ராஜ் பலத்த காயமடைந்து அதே இடத்தில் இறந்து போனார். சுரேஷ் சிகிச்சைக்காக திருப்பூர் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications