"செங்கோட்டை தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானியர்கள்
டெல்லி:
டெல்லி செங்கோட்டை தாக்குதலில் 6 பாகிஸ்தானியர்கள் ஈடுபட்டிருந்ததாக டெல்லிபோலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள செங்கோட்டையில் லஷ்கர் இ தொய்பாஅமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள்உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இது குறித்து டெல்லி போலீசார் தெரிவிக்கையில், இந்த சம்பவத்தில் பாகிஸ்தானைச்சேர்ந்த 6 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள் இந்த அமைப்பு டெல்லியில் மேலும் பலதாக்குதல்கள் நடத்த இருந்தது என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்காலிக போலீஸ் கமிஷனர் சர்மா மேலும் கூறியதாவது:
இந்த தாக்குதலை திட்டமிட்ட முக்கிய குற்றவாளியான அசாப் அகமது என்றபாகிஸ்தான் பிரஜை அவரது மனைவி ரேமனாவுடன் கிழக்கு டெல்லியில் இருக்கும்காசிபார் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அசாப் மே மாதம் முதல் டெல்லியில் தங்கியிருக்கிறார். யாரும் சந்தேகம்கொள்ளக்கூடாது என கம்ப்யூட்டர் மையம் ஒன்றை நடத்தி வந்தார். இந்திய பெண்ஒருவரையும் மணந்து கொண்டார்.
இவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில் ஒரு ஏகே 56 துப்பாக்கி, 4 கைஎறிகுண்டுகள், 2 தொடர் துப்பாக்கித் தோட்டாக்கள், 1 துப்பாக்கி, 1 கத்தி உட்படஏராளமான ஆயுதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் அசாப்பிடம் விசாரணை செய்ததன் மூலம் அபு சமால் என்ற தீவிரவாதிதங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் கிடைத்தது
அதனடிப்படையில் போலீசார் தெற்கு டெல்லியில் இருக்கும் ஜாமியா மிலியாஇஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருக்கும் அபு சமாலின் அபார்ட்மென்டைசெவ்வாய் கிழமை அதிகாலை சுற்றி வளைத்தனர்.
அபு சமால் போலீசாரை கண்டதும் சுடத் தொடங்கினார். போலீசாரும் திரும்ப சுட்டனர்.அதில் அவர் கொல்லப்பட்டார். அங்கிருந்து இரண்டு கை எறிகுண்டுகள், 1துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.
செங்கோட்டை தாக்குதல் நன்கு திட்டமிட்டே நடத்தப்பட்டிருக்கிறது. தாக்குதல்நடத்தியவர்கள் இந்த தாக்குதலை நடத்த டெல்லியில் பல நாட்கள் தங்கியிருந்துதிட்டமிட்டிருக்கிறார்கள்.
தாக்குதலை நடத்தியவர்கள் செங்கோட்டையில் நடக்கும் ஒளி ஒலி காட்சியை காணச்செல்லவது போல் ஆயுதங்களை ஒளித்து வைத்துக் கொண்டு சென்றுள்ளனர். அங்குமின்சாரம் தடை பட்டதும் சமாலும், அசாதும் ராணுவ வீரர்கள் உள்ள பகுதிக்குள்புகுந்தனர். மற்றவர்கள் வெளியே நின்று கொண்டனர்.
தாக்குதலுக்கு பின் அவர்கள் காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து சென்றுவிட்டார்கள்.சந்தேகத்ததை தவிர்க்க ஆயுதங்களை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டனர்.மூன்று சக்கர வாகனங்களில் தப்பி சென்றனர் என்றார்.
இந்த கும்பலைச் சேர்ந்த மேலும் நாலு பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள்ஸ்ரீநகர் தப்பி சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. தலைமறறைவாக இருப்பவர்களின்பெயர்கள் அபு சாத், அபு சகர், பிலால், ஹைதர் என தெரிய வந்துள்ளது.
இவர்கள் குறைந்த பட்சம் 7 முறையாவது சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில்செங்கோட்டைக்குள் சென்றுள்ளனர் என சிறப்பு போலீஸ் டெபுடி கமிஷனர் அசோக்சாந்த் தெரிவித்துள்ளார்.
தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை பிடிக்க உதவுமாறு மற்ற புலனாய்வுஅமைப்புகளை உயர் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்னர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications