பன்றியுடன் மோதிய சிறுத்தை சாவு
கோவை:
கோவையில், காட்டுப் பன்றியுடன் மோதி படுகாயமுற்ற நிலையில் அவதிப்பட்டு வந்த 17 மாத சிறுத்தை, சிகிச்சைபலனின்றி புதன்கிழமை இறந்தது.
கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் சகில்முடி என்ற எஸ்டேட் உள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த 17 மாதவயது கொண்ட சிறுத்தை ஒன்று சமீபத்தில் காயமுற்றது. காயமுற்ற சிறுத்தைக்கு வால்பாறை சரக வனத்துறைசார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் காயம் ஆறாமல், அது தொற்றுக் கிருமிகளால் மேலும் மோசமடைந்தது. இதையடுத்து புதன்கிழமைசிகிச்சை பலனின்றி அந்த சிறுத்தை இறந்தது.
இதுகுறித்து வால்பாறை சரக வன அதிகாரி தங்கராஜ் கூறுகையில், காட்டுக் கரடியுடன் நடந்த சண்டையில் இந்தசிறுத்தை காயமடைந்தது. காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோது, தொற்றுக் கிருமிகள் தாக்கின. இதனால்சிறுத்தை இறந்தது என்றார்.
இறந்த சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications