20 முறை சிறை சென்ற "கஞ்சா காரிகை
கோவை:
கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்ற வழக்கில் 20 முறை சிறை சென்று சாதனை படைத்த பெண், குண்டர் சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
கோவை அருகே உள்ள கவுண்டம் பாளையத்தில் முறுக்குக்காரத் தெரு உள்ளது. இங்கு கஞ்சா விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது.
இந்த தெருவில் உள்ள பலர் இதே தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கபோலீசார் முடிவு செய்தனர்.
இங்கு வசித்து வரும் மாராள் என்ற மாராத்தாள் (45) கடந்த 20 ஆண்டுகளாக கஞ்சா விற்பனை செய்து வருகிறார்.தற்போது போலீஸார் மாராத்தாளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவர் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட முறை சிறைக்குச் சென்றுள்ளார். தொடர்ந்து கைது செய்து, நீதிமன்றத்திற்குச்சென்றாலும், அபராதம் செலுத்தி விட்டு வெளியே வந்து தொழிலை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளார்.
இவரது கணவர் சின்னமாரியும் கஞ்சா விற்பனையில் அடிக்கடி சிறைக்குச் சென்று வந்துள்ளார். சிறைக்குச் சென்றசின்னமாரி உடல்நலக் குறைவால் இறந்து போனார்.
இந்நிலையில் தொழிலை தீவிரமாக மேற்கொண்ட மாராளைப் போலீசார் குண்டர் சட்டத்தில் அடைக்க முடிவுசெய்து மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். பரிந்துரையை ஏற்ற கலெக்டர் மாராளை குண்டர் சட்டத்தில்அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மாராள் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications