அமெரிக்க கடற்படை அதிகாரியைக் காப்பாற்றியது இந்தியா
மும்பை:
அமெரிக்க கப்பலில் குடல்வால் நோய் காரணமாக பரிதவித்த அமெரிக்க கடற்படைஅதிகாரியை, இந்திய கடற்படை அதிகாரிகள் தங்களது கப்பலில் மீட்டு,மருத்துவமனையில் சேர்த்தனர்.
மும்பை கடலில், மேற்கே 100 நாடிகல் மைல்கள் தொலைவில் அமெரிக்க கடற்படைகப்பலிலில் கடும் குடல் வால் நோய் காரணமாக, அமெரிக்க கடற்படை அதிகாரிலெப்டினன்ட் ஜம்ஸ் ஹம்பிரே வலியில் துடித்தார்.
இதுகுறித்து, இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு அமெரிக்க கடற்படை கப்பலிலிருந்து,நோயால் வாடும் ஒருவரை காப்பாற்றுமாறு செவ்வாய்கிழமை காலை தகவல் வந்தது.
தகவல் கிடைத்தவுடன் இந்திய கடற்படை வீரர்கள், சீகிங் ஹெலிகாப்டரில்விரைந்தனர். பகல் 12.25 மணிக்கு அமெரிக்க கடற்படை கப்பலில் இறங்கிஹம்பிரேயை ஏற்றிக் கொண்டு, சிகிச்சைக்காக அவரை மும்பை பிரீச் கான்டிமருத்துவமனையில் சேர்த்தனர்.
சீ கிங் ஹெலிகாப்படர், பல முறை கப்பல்களில் பாதிக்கப்பட்ட நோயாளிகளைகாப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடலில் தத்தளித்த பலமீனவர்களின் உயிரையும் காப்பாற்ற இந்த ஹெலிகாப்டர் பயன்பட்டுள்ளது.
இந்தியா, 1998-ம் ஆண்டு மே மாதம் பொக்ரானில் அணுகுண்டு சோதனைக்குப் பின்,சீ கிங் ஹெலிகாப்டருக்குத் தேவையான உதிரி பாகங்களை தருமாறுஅமெரிக்காவிடம், இந்தியா கேட்டபோது, அமெரிக்க மறுத்து விட்டது. இப்போதுஅதே ஹெலிகாப்டர் மூலம் அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவர்காப்பாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications