எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்காக த.மா.கா. போராட்டம்
சென்னை:
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ் ஆள் எடுப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டஉத்தரவை அரசு வாபஸ் பெற்றதை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி.பிரிவு போராட்டம் நடத்தவுள்ளது.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி.பிரிவு தலைவர் வள்ளல்பெருமாள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், 1998ம் ஆண்டுபிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில், எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பணியிடங்களின் காலியிடங்களை, பதவி உயர்வு மற்றும் புதிதாகஆள் எடுத்தல் ஆகியவற்றின் மூலம் நிரப்ப அரசு முடிவு செய்திருந்தது.
ஆனால் அரசின் உத்தரவை அமல் செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதையடுத்து தான் பிறப்பித்த உத்தரவை அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது. இதுதாழ்த்தப்பட்டோருக்கு விரோதமான முடிவு.
இதை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு சார்பில் போராட்டம் நடத்தப்படும். போராட்ட தேதி குறித்து கட்சித் தலைவர் மூப்பனாரிடம்ஆலோசனை பெற்ற பின் முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications