லஞ்சம் வாங்கிய அதிகாரி நீக்கம்
கோவை:
லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கோவை மாநகராட்சியில் பணியாற்றி வருபவர் சங்கரநாராயணன். இவர் சமீபத்தில் தெற்கு மண்டலத்திலிருந்து வடக்கு மண்டலத்திற்கு மாற்றலாகிவந்தார். இந்நிலையில் 29ம் தேதி மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை கமிஷனர் விவேகானந்தம் தலைமையில், தனிப்படையினர் வடக்கு மாநகராட்சி மண்டலஅலுவலகத்திற்கு வந்தனர். அங்கு திடீர்சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி, யாரும் வெளியில் செல்லக் கூடாது என உத்தரவிட்டனர்.
பின்னர் அங்கு நகரமைப்பு பிரிவிற்குள் சென்று பில்டிங் இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணனை சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவரது பாக்கெட்டிலிருந்துஅனைத்து பொருட்களையும் டேபிளில் வைக்கும்படி கூறினர். அப்போது அவர் தனது பாக்கெட்டிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டு கட்டு ஒன்றை எடுத்துடேபிளில் வைத்தார்.
பின்னர், அவரை ரசாயனப் பொருள் அடங்கிய தண்ணீரில் கையை விடக் கூறினர். அப்போது அவரது கையில் இருந்த சாயத்தால் கையில் வண்ணம் ஏற்பட்டது.இதையடுத்து அவரை உடனடியாகப் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications