கால்வாயில் மிதந்த பெண் சிசு
சேலம்:
சேலம் மாவட்டம் திருமணித்தாறு கால்வாயில் மிதந்து வந்த பெண் சிசுவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
மதுரை உசிலம்பட்டிக்கு அடுத்ததாக பெண் சிசுக் கொலைக்கு பெயர் போன இடமாக மாறி வருவது சேலம் தான். இங்கு பெண் சிசுக் கொலைகள்நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த சில மாதங்களில் ஈரோடு, சேலம் ஆகிய நகரங்களில் பெண் சிசுக் கொலை அதிகரித்துள்ளது. அனாதையாக வீசப்படும் இந்த சிசுக் கொலைகள்குறித்து போலீஸார் கண்டுகொள்ளவதேயில்லை.
எனவே, இந்த சிசுக் கொலைகளைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் பிரயோஜனம் எதுவும் இல்லை.
இதற்கிடையே,சேலத்தில் உள்ள திருமணித்தாறு கால்வாயில் பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, கால்வாய் தண்ணீரில் மிதந்தவாறு ஒரு பெண்சிசுவின் உடல் வந்தது. பிறந்து சில மணி நேரங்களில் வீசப்பட்ட இந்த பெண் சிசுவைப் பற்றி பெண்கள் போலீஸில் புகார் செய்தனர்.
சேலம் டவுன் போலீஸார் இந்தக் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications