பெண் கர்ப்பம் .. எஸ்.ஐ.மகன் கைது

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்:

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பெண்ணைக் கர்ப்பமாக்கிய சப் இன்ஸ்பெக்டர் மகனைப் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தில் சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருபவர் பாலன். இவரது மகன் சஜேஸ் (24). இவர்கள் திருப்பூரில்உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

திருப்பூர் குமார் நகர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த பத்ரனின் மகள் திலகவதி (19). திலகவதியும், சஜேஸூம் கடந்த 3 ஆண்டுகளாகத் தீவிரமாகக்காதலித்து வந்தனர்.

சஜேஸ், தனது சகோதரி கல்கத்தாவில் படித்து வருவதாகவும், அவர் வந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் திலகவதியிடம் கூறினாராம்.

இந்நிலையில் காதல், வளர்ந்து கர்ப்பத்தில் முடிந்தது. எனவே திலகவதி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சஜேஸ்சிடம் வலியுறுத்தி வந்தார். ஆனால்,திலகவதி தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால் உன்னை என் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என சஜேஸ் கூறியுள்ளார்.

இதையடுத்து தன்னை ஏமாற்றியதாகக் கூறி சஜேஸ் மீது திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் திலகவதி. இந்த புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டரின் மகன் சஜேசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+