எம்.எல்.ஏக்கள் பதவி பறிப்புக்கு த.மா.கா. ஆதரவு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தமிழ் மாநில காங்கிரஸ் (மனோகர் பிரிவு) கட்சியின் மூன்று எம்.எல்.ஏக்களின் பதவி பறிக்கப்பட்டது, சரியானநடவடிக்கையே என்று பாண்டிச்சேரி யூனியன் பிரதேச தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
கட்சியின் செய்தித்தொடர்பாளர் வி.பாலன் இதுகுறித்துக் கூறுகையில், மனோகர் பிரிவு எம்.எல்.ஏக்கள்நீக்கப்பட்டது சரியான நடவடிக்கையே. சுயநலங்களுக்காக சொந்தக் கட்சிக்கு துரோகம் செய்யநினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்.
சபாநாயகரின் நடவடிக்கையை பாரதீய ஜனதாக் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் விமர்சித்துள்ளதுகண்டிக்கத்தக்கது. உ.பி. மாநிலத்தில் ஜனநாயக விதிமுறைகளுக்கு மாறாக கல்யாண் சிங் அரசைக் கவிழ்த்தபா.ஜ.க.வுக்கு பாண்டிச்சேரி சபாநாயகரை விமர்சிக்கும தகுதியில்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications