சிறுசேமிப்பு மூலம் ரூ. 1800 கோடி வசூலிக்கத் திட்டம்
கோவை:
சிறு சேமிப்புத் துறை நடப்பு நிதியாண்டில் ரூ. 1800 கோடி வசூலிக்க முடிவுசெய்துள்ளது என தமிழ்நாடு சிறுசேமிப்புத் துறை ஆணையர் ஸ்கந்தன் தெரிவித்தார்.
கோவையில் தமிழ்நாடு அரசு நடத்தும் லாட்டரியில் ஐந்தரை கோடி ரூபாய்க்கானபரிசுச் சீட்டுக் குலுக்கல் நடந்தது. இந்தக் குலுக்கலில் வேலூர் மாவட்டத்தில்வாங்கப்பட்ட லாட்டரி சீட்டிற்கு ஐந்தரை கோடி ரூபாய் பரிசு விழுந்தது.
குலுக்கல் முடிவிற்குப் பிறகு நிருபர்களிடம் சிறுசேமிப்புத் துறை ஆணையர் ஸ்கந்தன்அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த ஆண்டு சிறுசேமிப்பில் ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள்விற்பனையானது. இந்த ஆண்டு இது 1800 கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுஇலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை இந்த தொகைரூ. 619 கோடியாக உள்ளது.
இந்த ஆண்டு நவம்பர் வரை 800 கோடி ரூபாய்க்கு சிறுசேமிப்பு பத்திரங்கள்வழங்கப்பட்டுள்ளன. தபால் துறையில் ஸ்டிரைக்கால் இந்த சிறு சேமிப்பு பத்திரங்கள்விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது அடுத்த மாதம் தெரிய வரும்.
பிற மாநில லாட்டரிகளை விற்க தமிழக அரசு தடை ஏற்படுத்தவில்லை. ஆனால்,முறையாக, முறைப்படி இதனை நடத்த வேண்டும். விற்பனை வரி செலுத்த வேண்டும்என்பது தான் தமிழக அரசு கூறுகிறது.
பரிசு விழுந்த பின்னர் கருவூலத்தின் மூலம் பணம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதுஉண்மைதான். பரிசு சீட்டு விழுந்த பின்னர் அதனைக் கோர 60 நாட்கள் அவகாசம்அளிக்கப்படுகிறது.
பரிசுத் தொகை வழங்க கால தாமதம் ஆனாலும், பரிசு கிடைப்பது நிச்சயம்.
இதுவரை லாட்டரியால் அரசுக்கு 40 கோடி ரூபாய் லாபம் ஈட்டப்பட்டுள்ளது. பரிசுத்தொகை கோரப்படாத டிக்கெட்டின் மதிப்பு ஒரு கோடியாகும் என்றார்.