ஹைதராபாத் சென்றார் ஸ்டாலின்
சென்னை:
சென்னைக்குக் கூடுதல் கிருஷ்ணா நீர் பெற வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக சென்னை மேயர் ஸ்டாலினும், பொதுப்பணித்துறை அமைச்சர்துரைமுருகனும் ஹைதராபாத் சென்றுள்ளனர்.
சென்னையில் இந்த ஆண்டு பருவமழை சரியாகப் பெய்யாத காரணத்தால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க தமிழகஅரசும், சென்னை மாநகராட்சியும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பொதுமக்களின் குடிநீர்ப்பற்றாக்குறையை தீர்த்து வருவது கிருஷ்ணா நதிநீர்தான். ஆந்திர அரசு தமிழகத்துக்கு வழங்கி வரும் கிருஷ்ணா நீர்சுத்திக்கரிக்கப்பட்டு சென்னை நகர மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆந்திர அரசிடம் கூடுதல் குடிநீர் பெற தமிழக அரசு முடிவுசெய்தது.
இதைத்தொடர்ந்து ஆந்திராவிலிருந்து 4 டி.எம்.சி. நீர் கூடுதலாக விடுவதை வலியுறுத்த மேயர் ஸ்டாலின் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்ஆகியோர் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு விமானம் மூலம் சென்னை சென்றனர்.
இவர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேசுவார்கள். சென்னையில் பருவ மழை தவறி விட்டதையும், அதனால் குடிநீர்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதையும் எடுத்துக் கூறுவார்கள்.












Click it and Unblock the Notifications