பாத்திமா பீவி, கருணாநிதி புத்தாண்டு வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் பல தலைவர்கள் புத்தாண்டையொட்டிமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு திங்கள் கிழமை பிறக்கிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் பாத்திமா பீவி விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:

மக்கள் அனைவரும் நாட்டின் பெருமையை பாதுக்காக்க வேண்டும். மக்கள் அனைவரும் மத ஒற்றுமையுடன் வாழவேண்டும். அமைதியையும, தேச ஒற்றுமையையும் பாதுகாக்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். நாட்டின்வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

கருணாநிதி: மக்கள் சமூகத்திற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் தங்கள் கடமையை செய்வதில் கவனம் செலுத்தவேண்டும். புத்தாயிரம் ஆண்டில் சமூக நீதி காப்பதில் தமிழகம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலமே நாடும் முன்னேற்றமும், வளர்ச்சியும் அமையும். இந்த அரசுஅதை கருத்தில் கொண்டுதான் செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

ஜெயலலிதா:

இந்த புத்தாண்டின் போது மக்கள் அனைவரும் புதிய சமூகத்தை உருவாக்க முழு மனதுடன் முன் வர வேண்டும்என கேட்டுக் கொண்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர் சங்கரய்யா, எம.ஜி.ஆர் கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன்மற்றும் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோரும் பொது மக்களுக்கு புத்தாண்டுவாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+