இனி ஊழல் செய்ய முடியாது....
திருப்பூர்:
லஞ்ச ஊழலை ஒழிக்க "லஞ்ச ஊழல் எதிர்ப்பு மக்கள் இயக்கம் என்ற அமைப்பு திருப்பூரில்உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
திருப்பூரில் லஞ்ச ஊழல் ஒழிப்பு மன்றத்தின் சார்பாக மக்கள் விழிப்புணர்வு கருத்தரங்கும், லஞ்ச ஊழல் எதிர்ப்புமக்கள் இயக்கம் என்ற அமைப்பின் துவக்க விழாவும் நடந்தது. இந்த விழாவில், தமிழ்நாடு லஞ்ச ஊழல் ஒழிப்புமன்றத்தின் தலைவர் பொன்னுரங்கள் தலைமை வகித்து பேசியதாவது:
நமது நாட்டில் 90 சதவீத அரசியல்வாதிகளிடம் ஒழுக்கம் இல்லை. கல்வி, மருத்துவம் உள்பட அனைத்துதுறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. நாளுக்கு நாள் ஊழல் அதிகரித்து வருகிறது. ஊழல் குறித்து தேசிய அளவில்மக்களை விழிப்புணர்வு பெறச் செய்ய வேண்டும். இதனை எதிர்த்துபோராட வலுவான மக்கள் அமைப்பு உருவாகவேண்டும்.
ஊழலைக் குறைக்கவும், அராஜக அரசியலை ஒழிக்கவும், ஊழல்வாதிகளைத் தண்டிக்கவும், அரசியல் சட்டத்தில்போதுமான திருத்தம் கொண்டு வர வேண்டும். பாதுகாப்புத் துறையில் ஊழல் செய்வோருக்கு மரண தண்டனைஅளிக்க வேண்டும். ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை அளிக்க வேண்டும் என்றார்.
வேலம்பாளையம் பேரூராட்சித் தலைவர் பெரியசாமி பேசுகையில், ஊழல் செய்பவரை பதவியில் இருப்பவர்களும்எதிர்க்க வேண்டும். ஊழலைக் கட்டுப்படுத்த, பெதுமக்கள் தீவிரமாக செயல்பட வேண்டும். லஞ்சம் கொடுத்துஊக்கப்படுத்துவதைபொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications