For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் நார்வேயின் 3 அம்ச சமரச திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் வகையில் நார்வே தூதுக்குழு 3 அம்ச சமரசதிட்டத்தைத் தயாரித்துள்ளது.

இலங்கையில் கடந்த 17 ஆண்டுகளாக விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

இதைத் தீர்த்து வைக்கும் முயற்சியில் நார்வே, இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக நார்வே தூதுக்குழுவினர்இலங்கைக்குச் சென்று அதிபர் சந்திரிகா மற்றும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.

தற்போது இலங்கைத் தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் 3 அம்ச சமரசத் திட்டத்தைத் தயாரித்துள்ளார்.

அந்தத் திட்டம் குறித்து நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் கூறுகையில், விடுதலைப்புலிகள் சண்டை நிறுத்தம் மட்டுமின்றி, வெடிகுண்டுத்தாக்குதல், தற்கொலைப்படைத் தாக்குதல் ஆகிய வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடாமல் சுயக்கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும்.விடுதலைப்புலிகளும், அரசும் ஒரே நேரத்தில் சண்டைநிறுத்தத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

சண்டை நிறுத்தத்தைக் கண்காணிக்க சர்வதேசக் கமிட்டியை அமைக்க வேண்டும். இருதரப்பினரும் 3 அம்சக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட பின்இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என்றார் எரிக்சோல்ஹெம்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X