For Daily Alerts
Just In
புதுவையிலிருந்து வந்த வேன் மீது லாரி மோதல்: 7 பேர் பலி
பாண்டிச்சேரி:
காட்பாடியைச் சேர்ந்த வாலிபர்கள் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்று விட்டுத் திரும்பும் வழியில் அவர்கள் வந்தவேன் எதிரே வந்த லாரி மீது மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 பேர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இவ்விபத்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே திங்கள்கிழமை இரவு நடந்தது. விபத்தில் இறந்தவர்கள்குறித்த பெயர், விவரம் எதுவும் தெரியவில்லை.
இவ்விபத்தில் இறந்தவர்களது சடலங்கள் மரக்காணம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துகுறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, January 2, 2001, 5:30 [IST]