For Quick Alerts
For Daily Alerts
Just In
காரைப் பல்லால் இழுத்து மாணவி சாதனை
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் காரை கயிற்றில் கட்டி அதை 1 கிலோ மீட்டர் தூரம் வரை பல்லால் இழுத்துச் சென்று பள்ளி மாணவிசாதனை புரிந்துள்ளார்.
பாளை கோக் ஜூடோ கராத்தே பள்ளியின் 12 வது ஆண்டு விழாவையொட்டி பாளையங்கோட்டை மத்திய நூலகம் எதிரே பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளின் கராத்தே சாகச நிகழ்ச்சி நடந்தது.
பாளையங்கோட்டை குழந்தை ஏசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7 ம் வகுப்புப் படிக்கும் மாணவி மீனா கார்த்திகா இந்த சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இவர் காரைக் கயிற்றில் கட்டி பல்லால் மத்திய நூலகத்திலிருந்து பாளை பஸ் நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலை வரை 1 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச்சென்று சாதனை புரிந்தார்.
Story first published: Tuesday, January 2, 2001, 5:30 [IST]