பாக். உலக வரைபடத்திலிருந்து நீக்கப்படும்: உமா பாரதி
சாட்டார்பூர் (மும்பை):
பிரதமர் வாஜ்பாயின் அலவலகத்தை தகர்க்க முயற்சி செய்தால் பாகிஸ்தான் உலக வரைபடத்திலிருந்து நீக்கப்படும்என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உமா பாரதி கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சாட்டார்பூர் மாவட்டம் தாவாரா என்ற இடத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில், பாகிஸ்தான் ஆதரவு லஸ்கர் ஈ தொய்பா, பிரதமர் வாஜ்பாயின் இல்லத்தை வெடிகுண்டு வைத்துத்தகர்ப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளது. இந்த மிரட்டலையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
பாகிஸ்தான் எப்போதும் தீவிரவாதத்தை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. லஸ்கார் ஈ தொய்பா அமைப்பு பிரதமர்இல்லத்தை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உலக வரைபடத்திலிருந்து பாகிஸ்தான் நீக்கப்படும்.
மத்தியில் ஆட்சி செய்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி, கூட்டணிக் கட்சித்தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறது காங்கிரஸ். காங்கிரசின் இந்தச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார் உமா பாரதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications