அதிமுக வில் சேருவாரா ராமதாஸ்?
கோவை:
அ.தி.மு.க அணியில் ராமதாஸ் சேருவார் என விவசாயத் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பொன்குமார் கூறினார்.
கோவையில் கட்டடத் தொழிலளர் மற்றும் விவசாயத் தொழிலாளர் கட்சித் தலைவர் பொன்குமார் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது:
கட்டடத் தொழிலாளர் சங்கத்தில் 8 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களது மாநாடு பிப்ரவரி மாதம்,சென்னையில் நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் பிரதமர் தேவகவுடா,மூப்பனார் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். அ.தி.மு.க. கூட்ணியில் எங்களதுகட்சி நீடிக்கும்.
கட்டடத் தொழிலாளர் நல வாரியத்தை தி.மு.க அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை. தேர்தல் வரும் நேரத்தில்ஒரு கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி 6 புதிய வாரியங்களை அரசு ஏற்படுதியுள்ளது.
தேர்தல் நேரத்தில் தங்களை தி.மு.க தோற்கடித்து விடும் என்ற எண்ணத்தில் ராமதாஸ் உள்ளார். அவர் விரைவில்அ.தி.மு.க விற்கு வந்து விடுவார். தமிழ்நாட்டில் சாதிச் சங்கங்களின் கட்சியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.தமிழ்நாட்டில் சிமெண்ட் தொழிற்சாலைகள் இருந்தும், அபரிதமான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் மூடப்பட்டிருக்கும் பஞ்சாலைகளைத் திறக்க வேண்டும். தொழிலர்களின் நலனைப் பாதுகாக்க இந்தநடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.