2000 ல் 1570 அகதிகள் மண்டபம் வருகை
ராமேஸ்வரம்:
2000 மாவது ஆண்டு மட்டும் இலங்கையிலிருந்து 1570 அகதிகள் மண்டபம் வந்துள்ளனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருவதால் அங்கிருந்து அகதிகள் படகு மூலம்தமிழகத்திலுள்ள ராமேஸ்வரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இவர்கள் தங்குவதற்காக மண்டபம், ராமேஸ்வரம் உள்பட தமிழகம் முழுவதும் 129 முகாம்களை தமிழக அரசு அமைத்துள்ளது.இலங்கையிலிருந்து வரும் அகதிகள் ஒவ்வொருவரும் ரூ 5,000 முதல் 15,000 வரை கொடுத்து படகு மூலம் ராமேஸ்வரம் வந்தவண்ணம் உள்ளனர்.
2000 மாவது ஆண்டு முடிந்து விட்ட நிலையில் ஒரு ஆண்டில் மட்டும் 1570 அகதிகள் இலங்கையிலிருந்து வந்துள்ளனர். இவர்கள்தனுஷ்கோடி, சேராங்கோட்டை, அரிச்சமுனை கடற்கரை பகுதிகளுக்கு வந்தனர். மண்டபம் முகாமில் தற்போது 4 ஆயிரம் அகதிகள்உள்ளனர். இன்னும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications