கோவையில் பாலே டான்ஸ்
கோவை:
கோவையில் புத்தாண்டு தினத்தையொட்டி ரஷ்ய கலை இரவு என்ற நிகழ்ச்சி கொடீசியா தொழிற் கண்காட்சிஅரங்கில் நடந்தது.
ரஷ்யாக் கலையான ஜிம்னாஸ்டிக் மற்றும் இந்தியக் கலைகளில் ஒன்றான கலைக் கூத்தும் இணைந்து புதியதொருநடனம் உருவானது. இந்த நடன நிகழ்ச்சிதான் "பாலோ டான்ஸ். ரஷ்யக் கலைக் குழவினர் இந்தியா முழுவதிலும்ரஷ்யக் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த வருகின்றனர்.
இந்தக் கலை நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. ஆனால், புதிய ஆண்டை,கோவையில் தான் ரஷ்யக் கலைக் குழு துவக்கி வைத்தது.
இங்கு நடந்த பாலோ டான்ஸ் பல்வேறு கருத்துக்களையும், மனித உறவுகளையும் விளக்கியதுடன், ரஷ்ய நாட்டின்மீது நாட்டம் கொள்ளும் வகையில் சிறப்புற அமைந்தது. இதில் காதலின் புனிதத் தன்மை, மரணத்தின் விளிம்பில்,அன்னப் பறவை ஆகிய நடனங்கள் ரசிகர்களின் பெரும் ஆராவரத்தைப் பெற்றது.
ரோமனிய நாட்டின் நடனம், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த நடனம் அனைவரது பாராட்டுதலையும்பெற்றது. இந்த கலை நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சந்தானம் துவக்கி வைத்தார். ரஷ்யக் கலைக் குழுவின்தலைவர் நிகோலஸ், கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விண்வெளிக்குச் சென்று சாதனை புரிந்த முதல் ரஷ்யப் பெண்மணி வாலன்டினா பெயரைக் கொண்ட கோவையைச்சேர்ந்த 9 பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications