சாவிலும் பிரியாத கணவன்-மனைவி
ஈரோடு:
ஈரோடு அருகே நெஞ்சு வலியால் அவதிப்பட்ட மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மனைவியின் பிரிவை ஏற்க முடியாத கணவனும் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோட்டில் சத்தியமூர்த்தி ரோட்டைச் சேர்ந்தவர் பெரியசாமி (42). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.இவருக்குத் தேன்மொழி என்ற மனைவி இருந்தார். தேன்மொழி நீண்ட நாட்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டுவந்தார்.
பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தும் குணமாகவில்லை. இதையடுத்து தேன்மொழி தூக்குப் போட்டுதற்கொலை செய்து கொண்டார்.
அப்போது வெளியில் சென்றிருந்த பெரியசாமி, மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதைஅறிந்து கதறினார்.
மனைவி இறந்ததால், தானும் வாழ விரும்பவில்லை எனக் கூறி, போலீசாருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்தார். தங்கள்இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் அதில் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications