உலகத் தமிழர்களுக்குக் குரல் கொடுக்கும் ம.தி.மு.க
மதுரை:
உலகத் தமிழர்களுக்காக மதிமுக குரல் கொடுக்கும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
மதுரையில் திங்கள்கிழமை நிருபர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:
உலகத் தமிழர்களின் கவலையைப் போக்க ம.தி.மு.க.செயல்பட்டு வருகிறது. காஷ்மீரில் பிரதமர் வாஜ்பாய்சண்டைநிறுத்தம் அறிவித்தார். அதன் பின்னரும் தீவிரவாதிகள் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்து தாக்குதல்நடத்தினர்.
இதில் 3 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இந்தப் படுகொலைக்குப் பின்னால் பாகிஸ்தான் இருக்கும் என்றுதெரிகிறது. கார்கிலில் கொடுத்த மரண அடியை பாகிஸ்தான் மறந்திருக்க முடியாது.
புதுவருடப்பிறப்பு, கிறிஸ்துமஸ், ரம்ஜான் இவற்றை முன்னிட்டு இலங்கையில் விடுதலைப்புலிகள் சண்டைநிறுத்தத்தை அறிவித்திருந்தனர். இந்த நிலையில் அதிபர் சந்திரிகா முப்படையையும் அனுப்பி 151 அப்பாவித்தமிழர்களை கொன்று குவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் விடுதலைப்புலிகள் சண்டைநிறுத்தம் அறிவித்த பிறகும் அதிபர் சந்திரிகா குமாரதுங்காஅமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஆயத்தங்களில் இறங்க மறுக்கிறார் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications