For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூடுபிடிக்கிறது அயோத்தி விவகாரம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விஸ்வ இந்துப் பரிஷத்தின் திட்டத்திற்கு பிரதமர் வாஜ்பாய் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ஒரு சிறிய கூடாரம் அமைத்து ராமர் சீதை ஆகியோரின் சிலைகள்வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அயோத்தி விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு கூறப்படும்வரை அயோத்தியில் தற்போதுள்ள நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவுபிறப்பித்துள்ளது.

இதற்கிடையே அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவர்அசோக் சிங் லால் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

ராமர் கோவில் கட்டும் விஸ்வ இந்து பரிஷத்தின் முயற்சிக்கு பிரதமர் வாஜ்பாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அயோத்தி விவகாரம் குறித்து பிரதமர் வாஜ்பாய் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தி விவகாரத்திற்கு 2வழிகளில் மட்டும்தான் தீர்வு காண முடியும். ஒன்று பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது. மற்றொன்று சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வரும் வரைக் காத்திருப்பது.

இந்த நிலையில் விஸ்வ இந்து பரிஷத் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று கூறி வருகிறார்கள். கோர்ட் தீர்ப்புவரும் வரைக் காத்திருப்பதே இப்பிரச்சனை தீர வழியாகும். அதை பிற அமைப்புக்கள் மீறினால் அவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும். அதாவது இந்த விஷயத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று தனதுஅறிக்கையில் கூறியுள்ளார் வாஜ்பாய்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X