ஓய்வு பெறுகிறார் பாக். கிரிக்கெட் வீரர் அக்ரம்?
Subscribe to Oneindia Tamil
இஸ்லமாபாத்:
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் சர்வ தேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறக் கூடும் என தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவராக இருந்தவர் வாசிம் அக்ரம். பாகிஸ்தான் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும் இவர் விளங்குகிறார்.
இங்கிலாந்து அணியுடன் நடைபெறவிருக்கும் போட்டிக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அக்ரம் ஓய்வு எடுப்பது குறித்து முடிவெடுப்பார் எனகூறப்படுகிறது.
சென்ற முறை இங்கிலாந்துக்கு, பாகிஸ்தான் அணி சென்ற போது வாசிம் அக்ரம் சிறப்பாக ஆடாததால் இந்த முறை அவருக்கு அணியில் இடம் இருக்காதுஎன கூறப்பட்டு வந்தது. வாசிம் அக்ரம், உடல் தகுதி அடிப்படையில் அவர் அணயில் இடம் பெறுவார் என பாகிஸ்தான் பத்திரிக்கை செய்திதெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications