தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்
சென்னை:
தமிழகம் முழுவதும் 12.5 லட்சம் மாநில அரசு ஊழியர்களுக்குப் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமைதெரிவித்தார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி:
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படுவதற்கான கோப்பில் கையெழுத்துப் போட்டு விட்டேன். உடனடியாக அது கொடுக்கப்பட்டுவிடும்.
தமிழக அரசு ஊழியர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்படும். இதுதவிர தொகுப்பூதியம்,மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள், பகுதி நேர, முழு நேர ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் ஆண்டுக்கு 240நாட்களுக்கு மேல் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் ஆகியோருக்கு சிறப்பு போனஸ் வழங்கப்படும்.
புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை போனஸ் வழங்குவதற்கான அரசு உத்தரவு வெளிவரும். தமிழக அரசின் டி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு ஒருமாத சம்பளம் வழங்கப்படும். பொங்கல் போனஸ் கொடுப்பதன் மூலம் அரசுக்கு ஏறத்தாழ 245 கோடி ரூபாய் செலவாகும். 12.5 லட்சம் அரசுஊழியர்களும், 3.75 லட்சம் ஓய்வூதியம் பெறுபவர்களும் பயன் அடைவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications