ஜன. 18 ல் தேசிய மொழிகள் மாநாடு
சென்னை:
தமிழ் மொழி அகாடமி சார்பில் இந்த மாதம் 18-ம் தேதி தேசிய மொழிகள் மாநாடு டெல்லியில் நடக்கிறது.
தமிழ் மொழி அகாடமி சார்பில் டெல்லியில் நடைபெற இருக்கும் தேசிய மொழிகள் மாநாட்டை பிரதமர் வாஜ்பாய்துவக்கி வைக்கிறார்.
இந்த தகவலை வெளியிட்ட தமிழ் மொழி அகாடமியின் செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:
தமிழ் மொழி அகாடமி சார்பில் இந்த மாதம் 18-ம் தேதி டெல்லியில் தேசிய மொழிகள் மாநாடுநடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டை பிரதமர் வாஜ்பாய் துவக்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டில் தமிழ் மொழி மற்றும் கலாச்சார துறை அமைச்சர் தமிழ்குடிமகன் மற்றும் மத்திய, மாநிலஅமைச்சர்கள், மாநில கவர்னர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
மேலும் இந்த மாநாட்டில் தலைசிறந்த மொழியியல் வல்லுனர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள்,மொழி அறிஞர்கள், பேராசிரியர்கள், பல்வேறு துறைகளில் இருக்கும் சான்றோர்கள் கலந்து கொள்கின்றனர்.அவர்கள் பல மொழிகளின் சிறப்பு பற்றி விளக்குவார்கள் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications