கார் விலையை உயர்த்த டேவு நிறுவனம் திட்டம்
மும்பை:
டேவு மோட்டார் இந்தியா லிமிடெட் (டி.எம்.ஐ.எல்) நிறுவனம் அது தயாரிக்கும் மேடிஸ் காரின் விலையைஅதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
டி.எம்.ஐ.எல் நிறுவனம் தென் கொரிய ஆட்டோ நிறுவனமான டேவு மோட்டார் கம்பெனியின் ஒரு பிரிவாகும். இந்நிறுவனம் சியலோ மற்றும் நெக்சியா கார்களை தயாரித்து வருகிறது
மாடிஸ் காரை தயாரித்து வரும் டி.எம்.ஐ.எல். நிறுவனம் மாடிஸ் கார்களின் விலை ரூ 6,000 முதல் ரூ 12,000 வரைஉயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வு மத்திய ஜனவரி முதல் அமலுக்கு வரும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ரூ 3 லட்சம் முதல் ரூ 4 லட்சம் வரை விற்று வரும் நான்கு வித கார்களின் விலையும்அதிகரிக்கப்படுகிறது.
டேவு நிறுவனத்தின் விற்பனையும் 81 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக அறிவித்துள்ளது. சென்ற வருடம் 28,140கார்கள் விற்பனையாகியிருந்தது. 2000 மாவது ஆண்டில் அது 50,900 என்ற நிலையை எட்டியுள்ளது.
டி.எம்.ஐ.எல்- லின் முதன்மை அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான சாங் கிம் இது குறித்து கூறுகையில், வெகுகாலமாக கார்களின் விலையை உயர்த்தாமல் இருந்து வந்தோம். அது எங்கள் உற்பத்தி செலவினங்களைஅதிகரித்து விட்டது. எனவே கார்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.












Click it and Unblock the Notifications