தர்மபுரி மாவட்டத்தில் நிலநடுக்கம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் வைக்கப்பட்டிருந்தபாத்திரங்கள் உருண்டன.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நில நடுக்கம் இருந்தது. இந்த நிலநடுக்கம் , கோவை உட்படகேரளாவின் பல பகுதிகளில் சற்று அதிகமாக இருந்தது. இதே போன்று வியாழக்கிழமை அதிகாலையில் 5 மணிஅளவில் தர்மபுரி மாவட்டத்தில் லேசான நில அதிர்வு இருந்தது. இதனால், பல இடங்களில் பாத்திரங்கள்உருண்டன. பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு எழுந்தனர்.
போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் இன்ஸ்பெக்டர் வில்வராணி முருகன் கூறுகையில், வியாழக்கிழமை அதிகாலைஒரு வித மின் அதிர்வு போன்று ஏற்பட்டதால் வேகமாக எழுந்து பார்த்தேன். கட்டில், பீரோ சற்று நகர்ந்து இருந்தது.என்ன நடந்ததென்றே புரியவில்லை. பின்னர், நில நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தேன் என்றார்.
மார்கழி மாதம், கோலம் போட்டுக் கொண்டிருந்த கிரிஜா எனபவர் கூறுகையில், வீட்டு முற்றத்தில் கோலம்போடுவதற்காக தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென நிலம் ஆடுவது போல் உணர்ந்தேன்,சில விநாடிகளே நீடித்த இந்த நில நடுக்கத்தை நன்றாக உணர முடிந்தது என்றார்.
மிகவும் சில விநாடிகளே நீடித்த இந்த நிலநடுக்கம், தர்மபுரி மாவட்டம், மற்றும் அதனைச் சுற்றியுற்ற பகுதிகளில்இருந்த மக்கள் உணர்ந்துள்ளனர். இது தமிழகத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications