கோல்டு ஃபிளேக் ஒபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்தியா வெற்றி
சென்னை:
ஏ.டி.பி கோல்ட் ஃபிளேக் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் இரட்டையர் ஜோடி முதல் போட்டியில் வெற்றி பெற்று சிறப்பான துவக்கத்தைபெற்றுள்ளது.
சென்னையில் நடந்து வரும் கோல்டு ஃபிளேக் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர்.
ஆனால் இரட்டையர் ஆட்டத்தின் முதல் சுற்றில் இந்திய இரட்டையர் ஜோடியான லியாணடர் பயசும், மகேஷ் பூபதியும் வெற்றி பெற்றனர். ஆனால்சென்ற ஆண்டு இறுதி ஆட்டம் வரை தகுதி பெற்ற
இந்திய ஜோடியான சவ்ரவ் பாஞ்சா, பிரகலாத் ஸ்ரீநாத் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து விட்டது.
பயஸ், பூபதி ஜோடி ஸ்வீடன் வீரர்களான ஜோஹன் லான்ஸ்பெர்க் மற்றும் ஆன்ட்ரியஸ் வின்சிகுரா ஜோடியை எதிர்த்து விளையாடினர். முதல் செட்டை 6 -2 என்றபுள்ளிக் கணக்கில் இந்திய வீரர்கள் எளிதாக வென்றனர்.
ஆனால் இரண்டாவது செட்டை வெல்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால் மூன்று மாட்ச் பாயிண்டுகளை தொடர்ந்து வென்று இரண்டாவது செட்டையும்வென்று போட்டியையும் வென்றனர்.
இந்த வெற்றி குறித்து பூபதி கூறுகையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் 4 போட்டிகளை நாங்கள்தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்.
நம் நாட்டில் தோல்வி பெறுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் சாதனையை இந்தியாவிலும் தொடர்ந்து நிலைநாட்ட விரும்புகிறோம். ஆனால்அதற்காக நாங்கள் கடுமையாக போராட வேண்டும் என கூறினார்.