மூளைக் கட்டியை அகற்றி மதுரை டாக்டர்கள் சாதனை
மதுரை:
மூளையில் இருந்த கட்டியை அதிக ரத்த சேதமின்றி அறுவை சிகிச்சை செய்துள்ளனர் மதுரை டாக்டர்கள்.
மூளையில் இருந்த கட்டியை நவீன என்டாஸ்கோப்பி முறையில் அதிக ரத்தம் சேதமாகாமல் மூக்கின் வழியாக அறுவை சிகிச்சை செய்து மதுரைஅப்போலோ மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மதுரை நரிமேடு பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவர் சிறையில் வார்டனாக பணி புரிந்து வருகிறார் இவருக்கு சில காலம் முன்பு தலைவலி வந்தது. இதைஅவர் பொருட்படுத்தாமல் விட்டு விட்டார்.
இவருக்கு பார்வை குறைவு ஏற்பட்டவுடன் சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் எந்த விதமான பலனும் கிடைக்கவில்லை.
இதையடுத்து இவர் மதுரையிலிருக்கும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவர்கள் அவர் தலையை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அவரின்மூளைப்பகுதிக்கு அடியில் நாளமில்லா சுரப்பியில் பெரிய கட்டி வளர்ந்து வருவது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவருக்கு என்டாஸ்கோபிக் முறையில் அதிக ரத்த சேதமில்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூளையில் இருந்த கட்டிஅகற்றப்பட்டது.
இது பற்றி ராஜாவுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் அருண்குமார் கூறியதாவது:
இது போன்ற கட்டிகள் 30 வயது முதல் 40 வயதுடையவர்களுக்கு வருகின்றன. இந்த கட்டிகளை அகற்ற மண்டை ஓட்டை திறந்து அறுவை சிகிச்சைசெய்ய வேண்டும். இதனால் ரத்தம் அதிகமாக சேதமாகும். மேலும் நோயாளி அதிக நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
என்டாஸ்கோப்பி முறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சையில் அதிக ரத்தம் சேதமாகாது. நோயாளியும் அதிக நாள் மருத்துவமனையில் இருக்கவேண்டியதிருக்காது .
இந்த அறுவை சிகிச்சை முறையில் மூக்கின் வழியாக 1 மில்லி மீட்டர் விட்டம் உள்ள சிறு குழாயை செருகி, காமிரா வழியாக பார்த்துக் கொண்டேஅறுவை சிகிச்சை செய்யப்படும். இதனால் நோயாளிக்கு அதிக வலியின்றியும், குறைந்த நேரத்திலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்தவுடன் ராஜாவுக்கு பார்வை கிடைத்து விட்டது. பொதுவாக நாளமில்லா சுரப்பிகளில் இது போன்ற கட்டிகள் வந்தால் பார்வைகுறையும். முகம், கை கால்களில் பெரிதா வீங்கிவிடும் என கூறினார்.