கோவையில் தகவல் தொழில் நுட்ப மையம்
கோவை:
கோவையில் தொழில் நிறுவனங்கள் இணைந்து தகவல் தொழில்நுட்ப மையம் ஒன்றை உருவாக்க வேண்டும் எனஇந்திய மென்பொருள் பூங்கா இயக்குநர் ராஜலட்சுமி தெரிவித்தார்.
கோவையில் கோவை மெடிக்கல் சென்டர் துவங்கிய கே.எம்.சி.எச் ஆன்லைன்.காம் என்ற இணையத் தளத்தைதுவக்கி வைத்து இந்திய மென்பொருள் பூங்கா இயக்குநர் ராஜலட்சுமி பேசியதாவது;
கோவையில் அதிகபட்சமாக தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு மென் பொருள் பூங்கா ஒன்றுஇயங்க சாத்தியக் கூறுகள் அதிகரித்து வருகின்றன. எனவே இங்குள்ள தொழிலதிபர்கள் இணைந்து, விமானநிலையம் அருகே ஒரு மென்பொருள் பூங்காவை 500 முதல் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கலாம். இதற்குமாநில அரசு தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தமிழக தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் அனந்தகிருஷ்ணன் பேசியதாவது:
தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சம் இன்டர்நெட் இணைப்புகளை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுஅடுத்த ஆண்டில் 5 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையத் தகவல்கள் அதிகரிக்க வேண்டும். குறுகிய காலத்தில் இணைப்புகளைக் கொடுக்க வேண்டும். அதுகுறைந்த செலவில் இருக்க வேண்டும். அப்போது தான் இந்த துறையில் வெற்றி காண முடியும்.
போக்கவரத்து, கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் துவக்கப்படும் இணையத் தளம் வெற்றி பெறும் நிலையில்உள்ளது என்றார். இந்த துவக்க விழாவில் கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிடல் சேர்மன் டாக்டர் நல்லபழனிச்சாமி கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications