திரிணாமூல் காங்.தொண்டர்கள் 16 பேர் பலி
கொல்கத்தா:
மேற்குவங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸார் அழைப்பு விடுத்திருந்த பந்த்தையடுத்து நடந்த கலவரத்தில் 16 திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள்கொல்லப்பட்டனர்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பந்த்தையொட்டி நடந்த வன்முறையில் 16 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில்16 பேர் கொல்லப்பட்டனர்என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக, வேலை நிறுத்தத்தால் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் ஊழியர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை.
திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் அதிகமாக வசித்து வரும் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். பல வீடுகள் தீ வைத்துக்கொளுத்தப்பட்டன. வீடுகளில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி ஓட ஆரம்பித்தனர் என்றனர்.
இருப்பினும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கையில், ஹிம்நகர் கிராமத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் 13 பேர் கொலை செய்யப்பட்டனர்.
முன்னதாக, பந்த்துக்கு முழு ஆதரவு இருந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன. வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடியே கிடந்தன. பஸ்,ரயில்கள் எதுவும் ஓடவில்லை.
முதல்வர் கருத்து:
இதற்கிடையே முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா கூறுகையில், மம்தா பானர்ஜி வன்முறையைத் தூண்டி விடும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதை நாங்கள்பொருத்துக் கொண்டு இருக்க முடியாது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.