For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடைத்தரகர்கள் இல்லாமல் வேலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல் அதிகமானவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என தமிழக கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சியும் பள்ளி சீரமைப்பு மாநாடும் வியாழக்கிழமை நடந்தது.இந்த கண்காட்சியை திறந்து வைத்து தமிழக கல்வி அமைச்சர் அன்பழகன் பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:

தமிழகம் முழுவதும் கல்வி அறிவு பரவ வேண்டும், அப்போதுதான் நாடும் உயர்வு பெறும் . நாட்டு மக்களும் உயர்வு பெற முடியும். சமுதாய வாழ்வுசிறக்க குழந்தைகளுக்கு கல்வி அவசியம்

ஆசரியர்களுக்கு சமுதாயத்தில் முக்கியமான இடம் உண்டு. மூன்றாவது மில்லினியம் ஆண்டில் புத்துணர்வுடன் பணியாற்றுங்கள். எஸ்.எஸ்.எல்.சி மற்றும் ப்ளஸ் 2தேர்வுகளில் 50 சதவிகிதத்திற்கும் குறைவாக தேர்ச்சி விகிதம் காட்டும் ஆசிரியர்கள் கல்வித்துறை இயக்குனருக்கு அறிக்கை தர வேண்டும்.

ஆசிரியர்கள் நியமனத்தில் இடைத் தரகர்கள் யாரும் இல்லாமல் பலருக்கும் வேலை கிடைத்துள்ளது. ஒற்றைச் சாளரமுறையிலான மாணவர் சேர்க்கைமூலம் மாணவர்களுக்கு நல்ல பயன் கிடைத்துள்ளது. இதற்கு நாடு முழுதும் நல்ல வரவேற்பும் உள்ளது என கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X