உடுமலையில் பள்ளி மாணவர்களைக் காணோம்
Subscribe to Oneindia Tamil
உடுமலை:
உடுமலை பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவி உட்பட 4 மாணவர்கள் காணமல் போயினர். இது குறித்து போலீசார் வழக்கப் பதிவு செய்து தீவிரமாக தேடிவருகின்றனர்.
உடுமலைப் பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 5 ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சவ்பர்ணிகா, சியாம்குமார், இவரது தம்பி கார்த்திக், மற்றும்செல்வகுமார் ஆகிய மாணவர்கள் திடீரென காணாமல் போய்விட்டனர்.
பத்து வயதே நிரம்பிய இவர்கள் காணமல் போனதால், உடுமலைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து இவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications