அசாமில் 4 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
கவுஹாத்தி:
அசாம் மாநிலம் திப்பு என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு சுட்டுக்கொன்றனர்.
இதுகுறித்து விவரமாவது:
தலைநகர் கவுஹாத்தியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள திப்பு என்ற இடத்தில் வசித்து வந்த மர வியாபாரி வீட்டுக்கு தீவிரவாதிகள் கும்பல்ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றது. பின்னர் மர வியாபாரி, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. மரவியாபாரி சம்பவ இடத்திலேயே இறந்தார். பிற மூன்று பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
ஏற்கனவே மரவியாபாரிக்கு இந்தத் தீவிரவாதக் கும்பல் மிரட்டல் விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அசாமில் ஹிந்தி மொழி பேசும் மக்களைஇனம் கண்டறிந்து தீவிரவாதிகள் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications