என்.டி.ஆர். பேரன்கள் யாருக்கு சொந்தம்?
சென்னை:
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் பேரன்களை ஒப்படைப்பதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஆந்திர கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.
என்.டி.ராமராவின் பேத்தி குமுதினி. இவரது கணவர் பிரசாத். இவர்கள் இருவரும்சென்னையில் இருக்கும் திருவான்மியூரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டுகுழந்தைகளும் உண்டு.
சில மாதங்களுக்கு முன்பு குமுதினி திடீரென தற்கொலை செய்துகொண்டார். தனதுமகளின் தற்கொலைக்கு தனது மருமகன்தான் காரணம் என குமுதினியின் தந்தைசென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தனது பேரக்குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குழந்தைகளை குமுதினியின் பெறறோரிடம் ஒப்படைக்குமாறுஉத்தரவிட்டது.
குமுதினியின் பெற்றோர் ஆந்திராவில் வசித்து வருகின்றனர். இதனால் குமுதினியின்தந்தை சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கை வாபஸ் பெற்றுஹைதராபாத் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு தற்போதுஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications