For Daily Alerts
Just In
பிப்.25 ல் புதிய நீதிக்கட்சி மாநில மாநாடு
திருவண்ணாமலை:
புதிய நீதிக்கட்சியின் 2 வது மாநில மாநாடு அடுத்த மாதம் 25 ம் தேதி சென்னையில் நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சண்முகம்தெரிவித்தார்.
புதிய நீதிக் கட்சி நிறுவனத் தலைவர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:
புதிய நீதிக்கட்சியின் 2 வது மாநில மாநாடு வரும் 25 ம் தேதி சென்னையில் உள்ள ஆரணி அரங்கில் நடத்தப்படும். அப்போது வாகனப்பேரணி இல்லாமல்மக்கள் பேரணி நடத்தப்படும்.
கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே இவர்களால் எப்படி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர்., கட்சிஆரம்பித்த சில மாதங்களிலேயே திண்டுக்கல்லில் அமோக வெற்றி பெற்ற வரலாறும் தமிழகத்தில் உண்டு. இதை யாரும் மறந்து விட முடியாது. எங்கள்ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றார் சண்முகம்.
Comments
Story first published: Thursday, January 11, 2001, 5:30 [IST]