பள்ளிச் சான்றிதழ்களில் ஜாதிக்குத் தடை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மாணவர்களின் இடைநிலை பள்ளிச் சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்று சான்றிதழ்களில் ஜாதி, இனம், மதம்போன்றவற்றை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளியில் வழங்கப்படும் விண்ணப்பங்களில் மாணவர்களின் ஜாதி, மதம், இனம், உள்பட அனைத்துவிவரங்களும் கேட்கப்படுகின்றன. அதே போல் பள்ளிப்படிப்பை முடித்து வெளியேறும் போதும் பள்ளி மாற்றுச்சான்றிதழிலும் ஜாதி, மத விவரங்கள் குறிப்பிடப்படுகின்றன.

ஆனால் இது போன்று ஜாதி, மத விவரங்களை குறிப்பிடத் தேவையில்லை என்று கடந்த 1973 ம் ஆண்டு அரசுஅறிவுறுத்தியது. இது நடைமுறைப்படுத்தவில்லை.

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 31 ம் தேதி அரசு ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

இடைநிலை பள்ளிச்சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்று சான்றிதழ்களில் ஜாதி, சமயம் இல்லை என்றோ அல்லது அந்தஇரு பத்திகளுக்கும் எதிரே உள்ள இடத்தை காலியாக விடவோ விரும்பினால் அவர்கள் அப்படிச் செய்யலாம்என்று பள்ளி கல்வி இயக்குநருக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அது சரியாகக்கடைபிடிக்கப்படவில்லை.

அதனால் இனி வரும் காலங்களில் இதைக் கடைபிடிக்கும்படி பள்ளி கல்வி இயக்குநர் மற்றும் துவக்கக் கல்விஇயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+