ரூ. 5 லட்சம் நிலத்தை அபகரித்த பெண் கைது
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம்அபகரித்த பெண்ணை பாண்டிச்சேரி ஊழல் கண்காணிப்புப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து ஊழல் கண்காணிப்புப் பிரிவு போலீஸ் எஸ்.பி.முனுசாமி கூறுகையில், ரத்தினாவதி என்ற பெண், ரவிச்சந்திரன்என்பவரது பெயரிலிருந்த நிலத்தை தன் பெயருக்கு, போலியானஆவணங்கள் மூலம் மாற்றியுள்ளார்.
இதற்கு நிலப் பதிவு துணைப் பதிவாளும், வருவாய்ஆய்வாளரும் அவருக்கு உதவியுள்ளனர்.
ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் ரத்தினாவதி கைதுசெய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
ரத்தினாவதிக்கு துணை புரிந்த இரு அதிகாரிகளும்தலைமறைவாகி விட்டனர் என்றார் முனுசாமி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications