மதுரையில் வக்கீல்கள் போராட்டம் தொடர்கிறது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நான்காவது நாளாகவியாழக்கிழமையும் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தினர்.
வாரத்திற்கு ஆறு நாள் வேலை என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இந்தப்போராட்டம் நடந்து வருகிறது. தொடர்ந்த போராட்டத்தில் மதுரை நீதிமன்றங்களில்பணிகள் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையே, மதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில்நடந்த வழக்கறிஞர்கள் கூட்டத்தில், உயர்நீதிமன்றம் தனது உத்தரவை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications