For Daily Alerts
Just In
ரேஷன் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்
சென்னை:
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கூட்டுறவுத்துறை 1904 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது அது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்து ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்துவருகிறது. இந்த ஆண்டு 47 வது கூட்டுறவு வார விழா வரும் 19 ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழா அனைத்து மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி மற்றும் கிராமங்களில் கொண்டாடப்படும்.
நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலையில் பணியாற்றும் 7, 600 பேருக்கு ஊதியங்கள் மாற்றி அமைப்பது தொடர்பான அறிக்கை அரசின்பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளி வரும் என்றார் நேரு.
Story first published: Thursday, January 11, 2001, 5:30 [IST]