தொண்டர்களைத் தயார்படுத்துகிறார் கருணாநிதி
சென்னை:
சட்டசபைத் தேர்தலை சந்திக்கும் வகையில் தொண்டர்களைத்தயார்படுத்துவதற்காக தென் மாவட்ட திமுக தொண்டர்களுடன்முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி ஆலோசனைக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் சென்னையில்வியாழக்கிழமை பேச்சு நடத்திய பிறகு செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்மாவட்டங்களில் திமுகவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.
அதை மனதில் கொண்டு, இந்த முறை நடக்கவுள்ள சட்டசபைத்தேர்தலில் திமுக சிறப்பான வெற்றியைப் பெறதிட்டமிட்டுள்ளோம். அதன் பொருட்டே தென் மாவட்ட திமுகநிர்வாகிகளுடன் தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்திவருகிறேன்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருள்வழங்குவதில் மத்தியஅரசு நெருக்கடி அதிகரித்து வருகிறது.இருப்பினும் ரேஷன் பொருட்கள் குறைந்த விலையிலேயேதொடர்ந்து வழங்கப்படும் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.